ரசிகர்களின் வேண்டுகோளை உடனே நிறைவேற்றிய தர்ஷா குப்தா.!
சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜி தமிழ் போன்ற முன்னணி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த நடிகை தர்ஷா குப்தா. இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் " முள்ளும் மலரும் " என்ற தொடரிலும், சன் தொலைக்காட்சியில் " மின்னலே " என்ற தொடரிலும், விஜய் தொலைக்காட்சியில் " செந்தூரப்பூவே " என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்த மூன்று தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், தொடர்கள் மூலமாக மக்களிடையே பிரபலமாகாமல் இருந்து வந்தாலும், தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். சமூக வலைத்தளங்களின் துவக்கம் முதலாகவே தர்ஷா, தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
ஒவ்வொரு முறை தர்ஷா குப்தா வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில், நாளாக நாளாக தனது கவர்ச்சியை கூட்டிக்கொண்டே போகும் தர்ஷா குப்தாவின் சமீபத்திய புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கமெண்ட்டில் கவிதை மழையை பொழிந்து வருகின்றனர். தனது வாளிப்பான இடுப்பு தெரிய அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை கண்டு மயங்கியவர்கள் இன்னும் எழவே இல்லை என்றுதான் கூறவேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன்பாக நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கை அறையில் இருந்தவாறு புடவை அணிந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி தான் கேக் சாப்பிடுவது போலவும், குழந்தை தனத்துக்கு வயதில்லை என்று கூறியும் பதிவிட்டு இருந்தார்.
அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் எங்களுக்கு கேக் இல்லையா என்று கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இன்று அவர் ரசிகர்களுக்கு கேக் கொடுப்பது போல புகைப்படத்தை வெளியிட்டு யாருக்கெல்லாம் கேட்க வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
நீங்க தானே கேட்டீங்க.. வச்சிக்கோங்க..
Actress Dharsha Gupta Latest Photoshoot Saree